திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி வேட்பாளர் சி .என். அண்ணாதுரை ஆதரித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்தார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, நிர்வாகிகள் மு.பெ.கிரி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் செங்கம் குமார், விசிக மாவட்ட செயலாளர் நியூட்டன், சிபிஐ மாவட்ட செயலாளர் தங்கராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.