திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் சி .என். அண்ணாதுரை சனிக்கிழமையன்று திருவண்ணாமலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்கு வருகை தந்தார். உடன் திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், எம்.பிரகலநாதன், எஸ். ராமதாஸ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ச. குமரன், சி.எம். பிரகாஷ், செல்வி உள்ளிட்டோர் இருந்தனர். அப்போது நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற சிபிஎம் ஓய்வின்றி பாடுபடும் என்றனர்.