districts

img

பேருந்துகள் குறைத்து இயக்கப்படுகிறதா? மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுக்குமா?

சென்னை, ஜூலை 21 - சென்னை நகரில் பேருந்துகள் குறைத்து இயக்கப்படுவதாக புகார்  எழுந்துள்ளது. மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் 3454 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 1559 பேருந்து கள் சாதாரண கட்டணத்தில் இயக்கப் படுகின்றன. மேலும் 180 எக்ஸ்பிரஸ், 1301 டீலக்ஸ், 48 ஏசி, 145 சிறிய (ஸ்மால்)  பேருந்துகள் என 3233 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்து களில் சராசரியாக 27 லட்சத்து 86 ஆயிரம்  பேர் தினசரி பயணிக்கின்றனர். சாதாரண கட்டண பேருந்துகளில் மகளிருக்கு கட்டணம் இல்லை என்ப தால் பயணிகளின் எண்ணிக்கை தினசரி  அதிகரித்து வருகிறது. காலை, மாலை போன்ற நெரிசலான நேரங்களில் இந்த பேருந்துகளின் சேவை குறைக்கப் படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனை அமைச்சர், அதிகாரிகள் மறுத்தாலும், கள நிலவரம் வேறாக உள்ளது. நாட்-ரன் என்ற பெயரிலும், பேருந்து களை வேறு பணிமனைகளுக்கு மாற்றுவதாலும், ஏற்கெனவே குறிப் பிட்ட வழித்தடத்தில் இயக்கப்பட்டு  வந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. “பெரம்பூர் - திருவேற்காடு இடையே  29இ வழித்தடத்தில் 9 பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.  இதில் 3  பேருந்துகள் பூந்தமல்லி பணிமனைக்கு  மாற்றப்பட்டது. எஞ்சிய 6 பேருந்துக ளில் 3 பேருந்துகள் மட்டுமே இயக்கப் படுகின்றன. 3 பேருந்துகள் நாட்-ரன் என்ற பெயரில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் திருவேற்காட்டிலிருந்து வந்து செல்லும் மக்கள், மாணவர்கள், முறைசாரா தொழிலாளர்கள், கோவி லுக்கு வரும் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 9 பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். அதை சாதாரண பேருந்து களாகவே இயக்க வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருவேற்காடு கிளைச் செயலா ளர் பி.மனோகரன், மாநகர போக்கு வரத்து கழக மேலாண்மை இயக்கு நருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். குன்றத்தூர் பணிமனையில் இருந்து  இயக்கப்பட வேண்டிய 29 பேருந்துக ளில் 25 பேருந்துகள் மட்டுமே ஜூலை 21 அன்று இயக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் பணிமனையில் 85 பேருந்துகள் இருக்க வேண்டும். ஆனால் 79 பேருந்துகள் மட்டுமே உள்ளது. அதிலும் 55 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. 24 பேருந்துகள் இயக்கப்படவில்லை. தொழிலாளர்கள் பணிக்கு வந்தாலும் பேருந்துகளை கொடுக்காமல் அதி காரிகள் திருப்பி அனுப்புவதாக தொழிற்சங்கத்தினர் குற்றம் சாட்டு கின்றனர். அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கையால்  பொதுமக்களும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். நிர்வாகம் இதனை சீர்செய்யுமா?