வண்டலூர், ஜன. 23- மண்ணிவாக்கம் சுவாமி விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 25), தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றி ருந்தார். மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 4 பவுன் தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் திருட்டுப்போனது தெரிய வந்தது. இது குறித்து முருகன் ஓட்டேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே போல ஊரப்பாக்கம் அருகே உள்ள அருங்கால் செங்கேணி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் அம்சவேணி (29). இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2சவரன் தங்க நகை, ரூ.12 ஆயிரம், குழந்தைகளின் வெள்ளி கொலுசு போன்றவை திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து அம்சவேணி கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.