districts

பி.எஸ்.என்.எல். அலுவலக மாடியில் இருந்து விழுந்த அதிகாரி பலி

கடலூர், மே 21-

   கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் அலுவலகம் 3 மாடி கட்டிடத்தில் செயல்படுகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை அதிகாலை பிரதீப் குமார் (50) என்பவர் ரத்த வெள்ளத்தில் பொது மேலாளர் அலுவலகம் முன்பு இறந்து கிடந்தார். இதைக் கண்ட காவலாளி, இதுகுறித்து புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

  சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிரதீப் குமார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் துறை யினர் நடத்தி விசாரணையில், பிரதீப் குமார் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியிடம் மாற்றம் காரணமாக கட லூரில் இருந்து தெலுங்கானா மாநிலத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை பிரதீப் குமார் கட லூருக்கு வந்த போது ஏற்கனவே பணிபுரிந்த கடலூர் அலு வலகத்திற்கு சென்று, அங்குள்ள 3ஆவது மாடிக்கு சென்றுள்ளார். அப்போது மாடியில் இருந்து விழுந்து இறந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

   மேலும் பிரதீப் குமார் 3ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.