சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கரின் 133 வது பிறந்தநாளையொட்டி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின், சென்னை தொலைபேசி தமிழ்நாடு சார்பில் கோட்டூர்புரம் சித்ரா நகரில் உள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்பின் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் எஸ்.செல்லப்பா, மாநிலச் செயலாளர் எம்.ஸ்ரீதர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.