districts

தம்பியை கொன்ற அண்ணன் கைது

விழுப்புரம், ஆக 2-

     விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (36) சலூன் நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.

    ஆடி மாதத்தில் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த திட்டமிட்டனர். இந்நிலையில், சகோதரர் விநாயகத்தை அழைப்பதற்கு முருகன் சென்றுள்ளார். அப்போது, இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பு மோதலாக மாறியது.

     இதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் முருகனின் மார்பில் குத்தினார் விநாயகம். இதில் சம்பவ இடத்திலேயே முருகன் பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த வளத்தி காவல்துறையினர் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

   மேலும், விநாயகம் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.