districts

img

சிஐடியு பிரச்சார குழுவிற்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மேள தாளத்துடன் வரவேற்பு

செங்கல்பட்டு, மே 26-

    நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது, மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் தமிழகத்தில் 7 மையங்களில் இருந்து திருச்சி நோக்கி நடை பயணம் நடைபெறுகிறது.

    இதன் ஒருபகுதியாக எம்.தனலட்சுமி தலைமையிலான சென்னை மண்டலக் குழு மே 22-23 தேதிகளில் சென்னையில் துவங்கிய பிரச்சாரம் மே 25 அன்று செங்கல்பட்டு மாவட்டம் வந்தது.

    இந்தக்குழுவில் மாநிலச் செயலாளர்கள் பா. பாலகிருஷ்ணன், சி.திரு வேட்டை, மாவட்டச் செய லாளர்கள் சு.லெனின் சுந்தர் (வடசென்னை), பகத் சிங்தாஸ் (செங்கல்பட்டு), தமிழ்ச்செல்வன் (விழுப்புரம்), சுந்தரபாண்டியன் (கள்ளக்குறிச்சி) உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

உற்சாக வரவேற்பு வெள்ளியன்று (மே 25) செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் வந்தடைந்த பிரச்சார குழுவிற்கு மாவட்ட சிஐடியு சார்பில் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

   செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு நாள் நடைபெறும் பிரச்சாரத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் இ.சங்கர் துவக்கி வைத்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி, மாவட்ட பொருளாளர் பால்ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதி செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

   இதனைத் தொடர்ந்து ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி தைலாவரத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பிலும், மறைமலைநகர் பேருந்து நிலையம் அருகில் செங்கை பொதுத் தொழிலாளர்கள் சங்கம் சார்பிலும், மறைமலைநகர் மார்கெட் பகுதியில் ஏஐடியுசி சார்பிலும் சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பிஎம்டபுள்யு கார் தொழிலாளர்கள் சார்பிலும், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பிலும், புதிய பேருந்து நிலையம் எதிரில் மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பிலும், அரசு போக்குவரத்து பணிமனை வாயிலில் போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் சார்பிலும் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு ராட்டினம் கிணறு பகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.