சென்னை,அக்,27- சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை மற்றும் மோட்டார் விளையாட்டு மன்றத்தை சேர்ந்த பெண் கள் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மிகப்பெரிய ரிப்பனை அமை த்தனர். இருசக்கர வாகனத்தில் அணிவகுத்து மிகப்பெரிய இளஞ்சிவப்பு ரிப்பனை உரு வாக்கி ஆசியா சாதனை புத்க கம் மற்றும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற னர். மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 250 பெண் பைக் ஓட்டுநர்கள் இதில் கலந்து கொண்டனர் 250 பைக் ஆர்வலர்கள் பங்கேற்ற இந்த பேரணி வடபழனி காவேரி மருத்துவமனையிலிருந்து துவங்கி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நிறைவடைந் தது. இந்த நிகழ்ச்சிக்கு மாண்புமிகு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர். மா. சுப்பிரமணி யன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், மாநக ராட்சி மேயர் பிரியா ராஜன், காவேரி குழும மருத்துவ மனைகளின் இணை நிறுவ னர் மற்றும் செயல் இயக்கு னர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ், மற்றும் காவேரி மருத்துவமனை ஆழ்வார் பேட்டை மூத்த ஆலோசகர் மற்றும் இயக்குனர் டாக்டர் ஏ என் வைத்தீஸ்வரன் ஆகி யோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.