சென்னை, அக். 30 பழைய வாகனங்கள், வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்டவற்றில் உள்ள இரும்பு தகடுகளை உடைத்து உருக்கி கண மான இரும்பு கம்பிகளை உருவாக்க நவீன ஸ்கிராப் ஷ்ரெடர், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ளது. இது டிசம்பர் 23ஆம் தேதிக்குள் செயல்பாட்டுக்கு வரும்” என்று சுமங்கலா ஸ்டீல் ஆலை யின் தலைவரும் இயக்குநரு மான அஸ்வின் சபாநாயகம் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “புதுச்சேரியில் அமைக்கப் பட்டுள்ள முதலாவது ஸ்கிராப் ஷ்ரெடர் வசதி இது வாகும் என்றார். இதற்கான பழைய பொருட்களை அமெரிக்கா அல்லது சீனாவில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து பேச்சு நடத்தி வருவதாகவும் உருக்கப்படும் பழைய இரும்பு பொருட்கள் இரண்டாம் நிலை எஃகு தயாரிப்பதற்கான மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான எஃகு ஆலையான சுமங்கலாவில் 8 மிமீ முதல் 32 மிமீ வரை யிலான அனைத்து அளவு களிலும் 2லட்சம் டன் டிஎம்டி பார்களின் பல்வேறு தரங்களைத் தயாரிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்றார். எங்கள் தயாரிப்புகளில் பெரும்பாலானவை தமிழ்நாட்டிலும், கேரளா மற்றும் கர்நாடகாவிலும் விற்கப்படுகின்றன," என்றும் ராஜேந்திரன் கூறி னார். அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் நீல எஃகு டிஎம்டி கம்பிகளை தயாரிப்பதற்கான உள்கட்ட மைப்பில் முதலீடு செய்யத் தொடங்கும். இதற்கு ரூ. 15 கோடி செலவாகும். மொத்த விரிவாக்கச் செல வும் கடன்கள் மூலம் ஈடுசெய்யப்படும். இதைத் தவிர, கட்டுமானத்தில் நேரத்தை மிச்சப்படுத்தும் ரெடிமேட் ஸ்டீல் போன்ற வளைவுகள் மற்றும் இரும்பு வளையங்களை தயாரிக்கும் கருவிகளை இத்தாலியில் இருந்து நிறு வனம் இறக்குமதி செய்துள்ளது என்று நிறு வனத்தின் இயக்குநர் அஷ்வின் கூறினார்.