districts

img

திருவண்ணாமலையில் புத்தக திருவிழா துவக்கம்

திருவண்ணாமலை, மார்ச் 8- திருவண்ணாமலை புத்தக கண்காட்சியை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவை துணைத் தலைவர். கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சி யர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகளச் சங்க துணைத் தலைவர்.வ.வே.கம்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ. வேலு பேசிய போது, “தமிழ் நாட்டின் தலைநகரில் மட்டும் புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த நிலையை மாற்றி அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படுகிறது” என்றார். ஒருங்கிணைப்பு குழு, பள்ளி கல்வித்துறை ஆணையர், பொது நூலக இயக்குநர், தமிழ்நாடு பாடநூல் கழக துணை இயக்குநர், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் களின் சங்க நிர்வாகிகள் அனை வரையும் இணைத்து இந்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  இந்த புத்தக திருவிழா கண்காட்சி மார்ச் 17 ஆம் தேதி வரை காலை 10 மணி முதல், இரவு 9 மணி வரை நடை பெறுகிறது. தினசரி மாலை 6 மணி முதல், இரவு 8 மணி வரை சிறப்பு உரையரங்கம் நடைபெறுகிறது.