தோழர் லீலாவதி நினைவு தினத்தை முன்னிட்டு கள்ளக்குறிச்சியில் வாலிபர் சங்கத்தினர் மாவட்டத் தலைவர் எம்.என்.பழனி தலைமையில் ரத்ததான முகாம் நடத்தினர். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை வரவேற்றார். கோட்டாட்சியர் சரவணன் முகாமை தொடங்கி வைத்தார். ஓய்வு பெற்ற சுகாதார இயக்குநர் வி.உதயக்குமார், சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், நடராஜன்,மண்டப உரிமையாளர் சவரிமுத்து, மருத்துவர் பழமலை, எல்ஐசி கிளைச் செயலாளர் பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.