districts

img

நோபல் டெக் நிர்வாகத்தை கண்டித்து இன்று முற்றுகை போராட்டம்

காஞ்சிபுரம், ஆக.21-

     காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் நோபல் டெக் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திங்களன்று (ஆக.21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     18 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நடைபெறும்  13ஆவது நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரித்தும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை மூலம் கோரிக்கை நிறைவேற்ற வலி யுறுத்தியும் உத்திரமேரூர் பேருந்து நிலை யம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     உத்திரமேரூர் வட்டக்குழு உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலா ளர் சி.சங்கர், செயற்குழு உறுப்பினர் கே.நேரு, வட்டச் செயலாளர் விநாயகம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வி.சிவப்பிர காசம், வி.கே.பெருமாள் உள்ளிட்டோர் வீரம் செறிந்த தொடர் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.  

     ஆலை நிர்வாகமும், மாவட்ட நிர்வாக மும் தொழிலாளர் நலத்துறையும் உடனடி யாக தலையிட வலியுறுத்தி செவ்வாயன்று (ஆக.22) சிபிஎம் சார்பில் மாபெரும் முற்று கைப் போராட்டம் நடத்துவதாக மாவட்டச் செயலாளர் சி.சங்கர் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.