புதுச்சேரி, ஆக. 24- காரைக்கால் திருமலைராயன் பட்டி னத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகள் நடைபெற்றது. இந்த வேலைக்கான ஊதியத்தை உடனே வழங்காமல் 3 மாதங்களாக பயனாளிகளை அலைகழித்து வரும் டி.ஆர்.பட்டினம் வட்டார வளர்ச்சி அதிகாரியை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. இந்த போராட்டத்திற்கு தமிழரசி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில தலைவர் வின்சென்ட், பொதுச் செயலாளர் தமிழ்ச்செல்வன், மாநிலப் பொருளாளர் வழக்கறிஞர் தட்சிணா மூர்த்தி, சிபிஎம் காரைக்கால் மாவட்டச் செயலாளர் தமீம், விவசாய, விவசாய தொழி லாளர்கள் சங்கங்களின் நிர்வாகிகள் பழனி வேலு, துரைசாமி, பிரேம்குமார், ராஜேந்திரன்,மகிமை தாஸ் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அதிகாரி உறுதி இதையடுத்து, சங்கத் தலைவர்களிடம் வட்டார வளர்ச்சித் துறை பொறியாளர் பேச்சு நடத்தினார். அப்போது, 15 தினங்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.