சிதம்பரம், அக். 4- காட்டுமன்னார்குடி வட்டம் மா. ஆதனூர் கிராமத்தில் புதன்கிழமை (அக்.4 ) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொள்வ தற்கு) ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடை பெற்றது. கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார். இளங்கோவன், புக ழேந்தி, வெற்றி வீரன், நகர அமைப்பாளர் மணி கண்டன், குமராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் கள் ஜெயக்குமார், புஷ்ப ராஜ், முனுசாமி, முருக வேல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாமேதை காரல் மார்க்ஸ், சட்டமேதை அம்பேத்கர், தந்தை பெரி யார், நந்தனார் கொள்கை களை திரித்து பொது மேடை யில் பேசி வரும் ஆளு நரை கண்டித்து முழக்க மிட்டனர். அப்போது 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.