கடலூர், ஜூன் 21-
தமிழ்நாட்டின் ஆளூநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே மாநில அரசையும், ஜனநாயக இயக்கங்களையும் எதிர்த்து பேசி வருகிறார். அரசமைப்பு சட்டங்க ளுக்கு எதிராக செயல்பட்டு வரு கிறார்.
சுரண்டல் ஒடுக்குமுறைக் கொள்கைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டெடுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பது, உயிரி னித்தின் பரிணாம வளர்ச்சியை குறிப்பிடும் டார்வின் தத்துவத்தை திரித்து கூறுவதாக செயல்படுகிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி செல்லுமிடங்களில் கருப்பு கொடி காட்டி தங்களின் எதிர்ப்பை தமிழ்நாடு மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதன்தொடர்ச்சியாக கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் யோகா நிகழ்ச்சியில் கலந்து பங்கேற்பதற்காக வந்த ஆளுநர், வடலூரில் நிகழ்ச்சி களை முடித்துக் கொண்டு புதனன்று (ஜூன் 21) கடலூர் வழியாக சென்னை செல்வதாக இருந்தது.
ஆளூநருக்கு எதிர்ப்பை தெரி விக்கும் வகையில் இயக்கம் நடத்திட அனைத்துக் கட்சி கூட்டத்தின் முடிவின் அடிப்படையில் திருப்பா திரிப்புலியூர் சிக்னல் அருகே கருப்பு கொடி காட்டுவதற்காக அனைத்து கட்சிகளும் திரண்டனர். அப்போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் கோ. மாதவன் தலைமை தாங்கி னார். காங்கிரஸ் மாவட்டத் தலைவர் திலகர், மாநிலச் செயலாளர் ஏ.எஸ். சந்திரசேகரன், விடுதலை சிறுத்தை கள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செய லாளரும் துணை மேயருமான தாமரைச் செல்வன், சிபிஐ மாவட்ட துணைச் செய லாளர் குளோப், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ரஹீம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அருள்பாபு, தண்டபாணி மக்கள் அதிகார பொறுப்பாளர் பாலு, ரவி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கருப்பையன், ராஜேஷ் கண்ணன், மாநகரச் செயலாளர் அமர்நாத், ஒன்றியச் செயலாளர் பஞ்சாட்சரம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் நாகராஜன், மனித நேய மக்கள் கட்சி மாவட்டத் தலை வர் லேக்தாவுத், மதிமுக நகரச் செய லாளர் ஐயப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.