districts

img

குரங்கு குட்டியின் பிறந்த நாளை கொண்டாடிய ஊழியர்கள்

வண்டலூர், ஜூன் 11- வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி -கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து  உள்ளனர். இந்த மனித குரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகு வாக கவர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு   வெள்ளியன்று  முதல் பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்யப்பட்டது. மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குநர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார் வையாளர்களுடன் சேர்ந்து  கேக் வெட்டி கொண்டாடி னர். அந்த கேக்கில் “முதல்  பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா...” என்று எழுதப் பட்டு இருந்தது. பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.