விழுப்புரம், மே 21-
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வானூர் வட்டம் உப்பு வேலூர் கிராமம் சிவன் கோயில் அருகே அதிகாலை நேரத்தில் பறவை கள் வேட்டையாடுவதாக திண்டிவனம் வனசார அலுவல கத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு சென்று பார்த்தபோது 3 வாலி பர்கள் 20 அரியவகை பறவைகள் மற்றும் 10 உள்நாட்டு பறவைகளை வேட்டையாடியது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரை பிடித்து வனசரக அலு வலகத்திற்கு அழைத்து வந்து, அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் புதுவை மாநிலத்தை சேர்ந்த கவுதம், சூர்யா, சரவணன் என்பதும், இவர்கள் அறிய வகை பறவைகளை வேட்டையாடி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் 3 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த அரியவகை பறவைகள், மோட்டார் சைக்கிள் மற்றும் 2 நாட்டுத் துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.