districts

இருதரப்பினர் மோதல்: பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க தடை

பொன்னேரி,டிச.19- பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பதில் இரு தரப்பினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அதி காரிகள் பேச்சு நடத்தியும் முடிவு எட்டப்படா மல் இருந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் மீன்பிடிக்க அனுமதிக்க கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நிதி மன்றம், பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்க செல்லலாம். அவர்களை யாரும் தடுக்க கூடாது என்று உத்தரவிட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக ஆண்டிக்குப்பம் மீனவர்களிடம் கடந்த சில நாட்களாக நடை பெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இருந்தது.  சனிக்கிழமையன்று ஒரு தரப்பினர் மீன்பிடிக்க உரிமைகேட்டு குடும்பத்துடன் திருவள்ளூர் ஆட்சியர்  அலுவலகம் நோக்கி நடை பயணமாக செல்ல முயன்ற னர். அவர்களை பழவேற்காடு பஜாரில் போலீ சார் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனர். பின்னர் நடந்த சமாதான கூட்டத்தில் ஒரு தரப்பு மட்டுமே பங்கேற்றதால் திங்க ளன்று  மீண்டும் பேச்சுக்கள் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஞாயிறன்று மாலை ஆண்டிக்குப்பம் கிராமத்தில் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டு அவர்கள் ஒருவரை ஒரு வர் தாக்கிக்கொண்டனர். மேலும் வீடுகள், மற்றும் மோட்டார் சைக்கிள்களை நொறுக்கினர். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த மொத்தம் 44 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  சார் ஆட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் அதிகாரிகள் ஆண்டிக்குப்பம் கிராமத்தில் முகாமிட்டு பதட்டத்தை தணிக்க தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர்.