சென்னை, ஜூன் 22 -
மடிப்பாக்கத்தில் பாரதி இ-சேவை மையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் திறந்து வைத்தார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அரி கிருஷ்ணன் துவங்கியுள்ள பாரதி இ-சேவை மையம், எண் 22, சாய் பிளாசா, மேடவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கம், (ஷெல் பெட்ரோல் பங்க் அருகில்) சென்னை என்ற முகவரியில் அமைந்துள்ளது. இந்த மைய திறப்பு விழா வியாழனன்று (ஜூன் 22) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன், ஒருங்கிணைப்பாளர் டைமன் ராஜா வெள்ளையன், துணைத்தலைவர் ஜே.வி.ஜான், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பா.ஜான்சிராணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், பகுதிச் செயலாளர்கள் எம்.சி.பிரபாகரன் (பல்லாவரம்), ந.வெங்கடேசன் (ஆலந்தூர்), அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ம.சித்ர கலா,மூவரசம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.கே.ரவி (எ) விவேகானந்தன், திமுக 187வது வட்டச் செயலாளர் எம்.கே.ஜெய்,சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஜெ.கே.மணிகண்டன் (186), ஷெர்லி ஜெய் (187), வணிகர் சங்கங்களின் பேரவை காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவர் எம்.இமானுவேல் ஜெயசிலன், செயலாளர் டி.உமாபதி, பொருளாளர் லயன் வி.கார்த்திக், மடிப்பக்கம் வியாபாரிகள் சங்க தலைவர் சா.அர்ச்சுனன், செயலாளர் ஆர்.ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தீக்கதிர் நாளிதழ், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா ஆயிரம் ரூபாயை எஸ்.அரிகிருஷ்ணன் வழங்கி னார்.