திருவள்ளூர், அக் 10- பீடி தொழிலாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலி யுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சி யரிடம் மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாயன்று (அக் 10) ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது. செங்கை மாவட்ட பீடி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் தங்களது மனுக்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் சென்று வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் அடுத்த 30 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி யளித்தார். சேமநல நிதியிலிருந்து ஒன்றிய பாஜக அரசு நடத்தி வந்த மருத்துவ முகாம் தொடர வேண்டும், பொன்னேரி அருகில் உள்ள முஸ்ஸீம் நகர் மற்றும் பட்டூரில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தினர்.இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் டி.ஆர்.பலராமன் தலைமை தாங்கினார். இதில் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் எஸ்.பாபூ, மாவட்ட நிர்வாகிகள் எம்.கே.முருகன், என்.முத்துக்குமார், டில்லி, குப்புராஜ், சரளா, சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.