சென்னை, ஏப்ரல் 1- சென்னையில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் 3 தொலைதூர விரைவு ரயில்களில் அதிக பயணிகளுக்கு இடமளிக் கும் வகையில் சில 3-ம் வகுப்பு குளிர்சாதன பெட்டி யில் இருக்கைகள் 72-ல் இருந்து 80 ஆக அதிகரிக்கப் பட்டு உள்ளது. ஏ.சி. 3 அடுக்கு பெட்டிக ளுக்கு பதிலாக ஏ.சி. 3 அடுக்கு எகானமி பெட்டிக ளாக ரயில்வே மாற்றி யுள்ளது. 72பேர் பயணிக்க கூடிய இந்த புதிய பெட்டி யில் கூடுதல் இருக்கைகள் உருவாக்கப்பட்டு இருக்கின் றன. சென்னை-டெல்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மற்றும் சென்னை-அகமதா பாத் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் புதிய 3-ம் வகுப்பு எகானமி பெட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் முன்பதிவு அதிகமாக இருக்கும் பல வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. 3-ம் வகுப்பு ஏ.சி. பெட்டியில் கூடுதல் இருக் கைகள் சேர்க்கப்பட்டதன் மூலம் இட நெருக்கடி ஏற்படுத்துவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். குறுகிய படுக்கை மற்றும் கால்களுக்கான இடம் குறை வாக இருப்பது போன்ற வற்றால் அவதிப்படுவதாக வும் பெர்த்தில் தூக்கமின்றி தவிப்பதாகவும் குறிப்பாக நடுப்பக்க பெர்த்தில் படுப்பவர்கள் தூக்கத்தை தொலைப்பதாக புகார் தெரிவித்துவருகின்றனர். மூன்று அடுக்கு ஏ.சி. வகுப்பை விட. எகானமி வகுப்பின் கட்டணம் குறைவாகும். இதையடுத்து முன்பதிவு டிக்கெட்டுகள் எகானமி வகுப்புக்கு மாற்றப்பட்டதால் அதற் குரிய கழிக்கப்பட்ட கட்ட ணத்தை பயணிகள் திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.