கள்ளக்குறிச்சி,ஜூன் 29-
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், ரிஷி வந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 11 கிராம ஊராட்சிகளுக்கு தலா ரூ.2 லட்சம் மதிப்பில் குப்பை களை ஏற்றிச்செல்லும் மின்கலசுமை தூக்கும் வாக னங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவர் வடிவுக்கரசி சாமி சுப்பிர மணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சென்னம்மாள் அண்ணாதுரை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரங்கராஜன், பன்னீர் செல்வம், ஒன்றிய செய லாளர்கள் பெருமாள், துரைமுருகன், பாரதி தாசன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்தி கேயன் கலந்து கொண்டு மேலப்பழங்வூர், பாக்கம், கடம்பூர் உள்ளிட்ட 11 ஊராட்சி மன்ற தலைவர்களிடம் மின்கல சுமை தூக்கும் வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன் சிலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.