districts

img

தடை செய்த நெழிகி பொருட்கள்:அதிகாரிகள் எச்சரிக்கை

கிருஷ்ணகிரி, டிச.2 - ஓசூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட நெகிழி (பிளாஸ்டிக்) பைகள், டம்ளர்,பேப்பர் கப் உள்ளிட்டவற்றை கடை களில் தொடர்ந்து பயன் படுத்தி வருவதாக அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாநகர நல அலுவலர் பிரபாகர் தலைமையில் ஓசூர்-பாகலூர் சாலையில் சோதனை நடைபெற்றது. அப்போது, ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து 5 லட்சம் அபராதம் விதித்தனர். இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடை பெறும் என்றும் நெகிழி பைகளை, அதை சார்ந்த பொருட்களை விற்பனை செய்தால் அபராதம் அதி கரிக்கப்படும் என்றும் கடைகளுக்கு சீல் வைக்கப் படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.