தமிழ்நாடு அரசால் ஊத்தங்கரை வட்டம், பாம்பாறு அணை பகுதியில் ரூ. 1 கோடியே 85 லட்சத்தில் இலங்கை தமிழர்களுக்காக கட்டப்பட்ட 37 வீடுகள் முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பயனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு ஒப்படைத்தார். கூடுதல் மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் உஷாராணி குமரேசன் ஆகியோர் உடனிருந்தனர்.