திருவண்ணாமலை மாவட்டத்தில் அக். 23 முதல் நவ.30 வரை இணையவழியில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு குறும்பட போட்டியில் ‘தன்வினை’ படத்தின் திருவண்ணாமலை சத்யராஜ் முதல் பரிசும், போதை படத்திற்காக வந்தவாசி ஆர்.பாஸ்கரன், எஸ்.அப்துல் ரகுமான் இவருக்கும் இரண்டாம் பரிசும் கிடைத்தது. விளைவு படத்தின் திருவண்ணாமலை எம்.தமிழ்ச்செல்வனுக்கு மூன்றாவது பரிசும், 21 நாட்கள் படத்தின் வந்தவாசி எஸ்.அப்துல் ரகுமான், ஆர்.பாஸ்கரன், வந்தவாசி மனோஜ்குமாரின் டாட்லவ் படத்துக்கு ஆறுதல் பரிசும் கிடைத்தன. குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.பவன்குமார் கேடயம் மற்றும் பாராட்டு சான்று வழங்கினார்.