districts

img

மக்களவை பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

மக்களவை பொதுத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் 100 விழுக்காடு வாக்களிப்பதை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் கடலூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.  இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன்,  மகளிர் திட்ட இயக்குநர் சுருதி, சமூக நலத்துறை அலுவலர் கோமதி, மாற்றுத்திறனாளி அலுவலர் பாபு உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆட்சியர் அருண் தம்புராஜ் மூவர்ணத்தில் உள்ள பலூன்களை பறக்க விட்டார்.