சிதம்பரம், நவ.1- டிஜிட்டல் உலகத்தில் ஓவிய கலை அழிந்து வரும் நிலையில் ஓவிய கலையை மேம்படுத்தும் வகையில் சாலை விழிப்புணர்வு, மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியக் கண்காட்சி சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமனை பிரதான சாலையில் நடை பெற்றது. ஓவியர் மா.இளங்கோவன் தலைமை தாங்கினார். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இக்கண்காட்சி வருகிற 5 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சி தொடக்க விழாவில் ஓவியர்கள் பொன். மாதவ சர்மா, இல. சரவணன், காவல் ஆய்வாளர்கள் கல்பனா (அண்ணாமலை நகர்), ஆறு முகம் (சிதம்பரம்), உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஹரிதாஸ், அண்ணா மலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி, பிச்சாவரம் கூட்டுறவு சங்கத் தலைவர் வேணுகோபால், தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் பி.கற்பனை செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சியில் மாணவர்கள் தங்க ளின் சிறப்பு ஓவியங்களைக் காட்சிப்படுத்த அனுமதி உண்டு. சிறந்த ஓவியங்களுக்கு பரிசு வழங்கப்படும் என ஓவியர் மா.இளங்கோவன் தெரிவித்தார்.