மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளதை யொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மாவட்டஆட்சியர் அலுவலகத்திலிருந்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ், அரசு அலுவலர்கள்,பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.