விழுப்புரம் மாவட்ட அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வலியுறுத்தும் விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆட்சியர் த.மோகன் துவக்கி வைத்தார். அப்போது விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா, மாவட்ட வருவாய் அலுவலர் அ.ராஜசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.