districts

img

வேலூரில் விழிப்புணர்வு மாரத்தான்

வேலூர்,ஜன.6- வேலூர் மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் மாரத்தான் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் துவக்கி வைத்தார். காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் துவங்கிய ஊர்வலம் சித்தூர் பேருந்து நிலையம் வழியாக மீண்டும் விஐடி வந்தடைந்தது. இதில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் தனித் தனியாக முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா, துணை ஆணையர் (மதுவிலக்கு)  முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.