பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் கடலூரில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த திட்டத்தின் கீழ், 6 நபர்களுக்கு ரூ.22.00 லட்சம் மதிப்பில் மானிய உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இந்த கூட்டத்தில் வங்கி மேலாளர்கள், கடலூர் மாவட்ட ஆட்டோ மொபைல் சங்க தலைவர் நடராஜன், மற்றும் தொழில்முனைவோர்கள் கலந்துகொண்டனர்.