districts

img

வெளிவட்டச் சாலை பணியை விரைந்து முடிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை

திருவள்ளூர், நவ 20- திருத்தணி நகராட்சியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வெளி வட்ட சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்டோ சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது. ஆட்டோ சங்கத்தின் திருத்தணி நகர 14 ஆம்  ஆண்டு பேரவை கூட்டம்  திங்களன்று (நவ 20),  திருத்தணியில் நடை பெற்றது. இதற்கு நகர தலைவர் கே.பாபு தலைமை தாங்கினார். எம்.தயாளன் வரவேற்றார்.ஆட்டோ சங்கத்தின் மாவட்ட தலை வர் ஏ.கரிமுல்லா துவக்க வுரையாற்றினார். சிஐடியு நிர்வாகிகள் அந்தோணி,  பிருந்தாவனம், ஜெயவேலு ஆகியோர் வாழ்த்தி பேசி னர். நகர செயலாளர் கே.முத்து வேலை அறிக்கை யும், பொருளாளர் முனு சாமி  வரவு-செலவு அறிக்கை யையும் சமர்பித்தனர்.  ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டச்  செய லாளர் எம்.சந்திரசேகரன் பேரவையை நிறைவுசெய்து பேசினார்.திருத்தணியில் போக்குவரத்து அலுவலகம் தொடர்ந்து செயல்பட வேண்டும், போக்குவரத்து காவல்துறையினர் ஆன்லைன் அபராதம் விதிப் பதை கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் நகர தலைவராக கே.பாபு, செயலாளராக கே.சரவணன், பொரு ளாளராக ஏ.இப்ராஹிம் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.