திருவண்ணாலை,ஜன.24- திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் பொதுப்பணித்துறை சார்பில் மீன் பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏலம் விடப்பட்டது. இந்த நிலையில் கண்ணமங்கலம் ஏரியில் பொதுமக்கள் மீன் பிடிப்பதை தடை செய்யவேண்டும் என கண்ணமங்கலம் செம்படவர் தெருவை சேர்ந்த ரமேஷ் (48). தொழிலாளி. அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சாலமோன்ராஜா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் ஆரணியிலிருந்து தீயணைப்புத்துறையினர் வந்து ரமேஷை மீட்டனர்.