districts

தனிநபர் இடத்தை அபகரிக்க முயற்சி முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது புகார்

செங்கல்பட்டு, டிச.20- தனிநபர் இடத்தை அபகரிக்க முயற்சிப்பதாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தன்சிங் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மேற்கு தாம்பரம் கடப் பேரியைச் சேர்ந்தவர் முனுசாமி, அவருக்கு சொந்த மான இடத்தில் தனது ஐந்து சகோதரர்களுடன் வசித்து வந்துள்ளார்.  பழைய வீடு என்பதால் புதிதாக  வீடு கட்ட வீட்டை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட இடத்தை சமன் செய்துள்ளனர். இந்நிலையில் அப்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த  ப.தன்சிங், முனுசாமியின் குடும்ப சொத்தை விலைக்கு கேட்டுள்ளார். விற்க முடியாது என முனு சாமி சொன்னதின் பேரில் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்த தன்சிங் தனது அதி காரத்தை பயன்படுத்தி  முனுசாமியின் மனைக்கு முன்பு 15 அடி இடத்தை ஆக்கிரமித்து 17 வருட மாக பழுதடைந்த கோவில் ஒன்றை புதுப்பித் துள்ளார். இதனால் முனுசாமியின் மனைக்கு எந்த  வாகனமும் செல்ல முடியாத அளவுக்கு அந்த  கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலை யில் கடந்த 2013ம் ஆண்டு முதல் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முனு சாமியின் குடும்பம் முறையிட்டும் அதிமுக ஆட்சி என்பதால்  எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை  என தெரிகிறது. இந்நிலையில் மனுக்களை பெற்றுக் கொள்ளும் அரசு அலுவலர்கள் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் தன் சிங்குக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் பொது கிணறு, அம்பேத்கர் மன்றம் உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்துக், முனுசாமிக்கு சொந்தமான குடும்ப சொத்தை அபகரிக்க முயற்சி செய்யும் தன்சிங் மீதும், அவருக்கு ஆதரவாக செயல்படும் அரசு அலுவலர் கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என முனுசாமி தன் குடும்பத்தினருடன் திங்களன்று (டிச 20) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மனுநீதி நாள் கூட்டத்தில் மனு வழங்கி னார்.