districts

வணிகர் சங்க மாநாட்டில் முதல்வர் பங்கேற்கிறார் ஏ.எம்.விக்கிரமராஜா தகவல்

சென்னை, பிப். 25- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டம் ராஜா அண்ணாமலை மன்றத்தில் தென்சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் என்.டி.மோகன் தலைமையில் தலைமையில் நடைபெற்றது.  கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாநில  தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மாநில கூடுதல் செயலாளர் வி.பி.மணி,  மாநில செய்தி தொடர்பாளர் பி.பாண்டிய ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் இதுகுறித்து விக்கிரமராஜா செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் மே 5ஆம் தேதி 39ஆவது வணிகர் தின மாநில மாநாட்டினை தமிழக வணிகர் விடியல் மாநாடாக திருச்சியில் நடைபெற உள்ளது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். அப்போது தமிழக வணிகர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல் வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று அவர்க ளுக்குரிய தீர்வினை காண்பதே பேரமைப்பின் நோக்கமாகும் என்றார்.  வணிகர்களின் மீதான வன்முறை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், மாநிலம் தழுவிய உள்ளாட்சி, நகராட்சி, அறநிலையத்துறை வாடகை கடைகளின் வாடகை பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், நிலுவை வாடகை தொகையை தவணை முறையில் செலுத்திடவும், வேளாண் விளைபொருட்களுக்கான செஸ்  வரி நீக்கத்திற்கும், தொழிலாளர் நலத் துறையில் தற்போது புதிதாக 23 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள தராசு முத்திரை ஆன்லைன் பதிவுகளுக்கு கால அவகாசம் அளித்து வணிகர்களுக்கான விழிப்புணர்வை அளித்து அதன்பின்னர் அச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும், கட்டண சுங்கச்சாவடிகள் அகற்றம், உள்ளிட்ட  வணிகர்கள் சார்ந்த பல்வேறு கோரிக்கை களையும் முதல்வரிடம் வலியுறுத்துவோம் என்றும் அவர் கூறினார்.