சென்னை, ஜன.23- சென்னை புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மெட்ரோ ரயில்நிலையங்களில் லிப்ட், எஸ்கலேட்டர் போன்ற வசதிகள் உள்ள தால் மூத்த குடிமக்கள் எந்தவித சிரம மும் இன்றி வந்துசெல்ல முடிகிறது. இதே போன்ற வசதியை புறநகர் ரயில் நிலை யங்களில் அமைத்துத்தரவேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தி வந்தனர். வயதான வர்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணி கள் தங்கள் உடமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமப்படு கிறார்கள். அவர்கள் எளிதாக பிளாட் பாரங்களுக்கு செல்ல வசதியாக லிப்ட் வசதி செய்யப்படுகிறது. அரக்கோணம், வில்லிவாக்கம், பேசின் பாலம், வியாசர்பாடி, ஆவடி, கொரட்டூர், வண்ணாரப் பேட்டை, கொருக்குப் பேட்டை உள்ளிட்ட 20 ரயில்நிலையங்களில் லிப்ட் அமைப்பதற்கான கட்டுமானப் பணி கள் நடந்து வருகின்றன. புறநகர் மின்சார ரயில்நிலையங்களில் முழு வீச்சில் இப்பணிகள் நடந்து வருகின்றன. இது குறித்து ரெயில்வே அதிகாரி ஏழுமலை கூறு கையில், புறநகர் மின்சார ரயில்பயணி களுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்படு கின்றன. ரயில்நிலையங்கள் தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பிடம் மற்றும் லிப்ட் வசதி போன்றவை படிப்படியாக மேம்படுத்தப் படுகின்றன. இந்த பணி கள் 3 மாதத்தில் நிறைவடையும். மூத்த குடிமக்கள் பிளாட்பாரங்களுக்கு எளி தாக செல்ல வசதியாக இத்திட்டம் செயல் படுத்தப்படும் என்றார்.