ராணிப்பேட்டை, ஏப். 2 – குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை பட்ஜெட்டில் நிறைவேற்ற கோரி தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி கூட்டமைப்பு சார்பில் கண்ணில் கருப்பு துணி கட்டி சனிக்கிழமையன்று (ஏப். 1) முத்துகடைபேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் தலைவர் சக்கரவர்த்தி தலை மையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கோரிக்கைகளை விளக்கி மாநில செயலாளர் ரவி, சங்க செயலாளர் சுஷீலா, திமிரி சத்துணவு அமைப்பாளர் ராஜசேகர், எம். ஜெகதீசன், டி. சீனிவாசன், எம். லதா, எஸ். மலர், வெங்கடாசலம், ஆறுமுகம், துறை, மோகனமூர்த்தி ஆகியோர் பேசினர். கூட்டமைப்பின் பொருளாளர் தனபாக்கியம் நன்றி கூறினார்.