சென்னை, அக்.13- கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞர் தொலை நோக்குத் திட்டங்கள் பற்றிய கண்காட்சி மற்றும் இலக்கிய ஆய்வரங்கம் சென்னை மாநிலக் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை (அக். 12) நடைபெற்றது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச் சிக்கு உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை தாங்கினார். விழாவில் கலைஞரின் புறநானூற்றுக் கவிதைகளைத் திராவிட இலக்கிய ஆய்வு மாணவர் கதிரவன் இமயமும் மாநிலக் கல்லூரி மாணவி ச. பிரியதர்ஷினியும் வாசித்தனர். ‘எழுத்தாளர் கலைஞர்’ என்ற காணொலி திரையிடப்பட்டது. தொடர்ந்து கலைஞர் இலக்கியம் குறித்த ஆய்வரங்கில் ‘கலைஞரும் திரைப் படங்களும்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசு எம். ஜி. ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் இராஜேஸ் ‘கலைஞர் சிறு கதைகள்’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வன் ‘கலைஞரின் கவிதைகள்’ என்ற தலைப்பில் கவிஞர் வெண்ணிலா, ‘கலைஞரின் மொழி ஆளுமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் இமையம், ‘ கலைஞரும் தமிழக வரலாறும்’ என்ற தலைப்பில் இயக்குனர் ம.ரத்னகுமார் ஆகியோர் ஆய்வுரைகள் நிகழ்த்தினர்.