கள்ளக்குறிச்சி, செப். 17- கள்ளக்குறிச்சி மாவட்டம்,சின்னசேலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை யின் சார்பில் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் செப்.13 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலை வர் கலைஞரின் கனவு இல்லத் திட்டப் பயனாளிகளிடம் திட்டத்தின் பயன்கள் மற்றும் கருத்துக்கள் குறித்து கேட்ட றிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் பேசுகை யில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகை யில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் குடி சைகளே இல்லாத நிலையை உருவாக்கும் வகையில் தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தினை செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது . இத்திட்டத்தில் நோக்கம் குடிசைகளில் குடியிருந்து வரும் அனைத்து மக்களுக்கும் புதிதாக ஆர்.சி.சி. வீடு கட்டித்தருதல் ஆகும். அதன் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் குடிசை யில் குடியிருக்கும் பொது மக்களுக்கு புதிதாக ஆர்.சி.சி. வீடுகள் கட்ட ஆணை கள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வரு கிறது. இதில் சின்னசேலம் ஊராட்சி ஒன்றி யத்தில் உள்ள காளசமுத்திரம், ஊராட்சி வி.மாமந்தூர் ஆகிய ஊராட்சிகளில் கலை ஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் பணி கள் நடைபெற்று வருவதை நேரில் பார்வை யிட்டு பயனாளிகளை சந்தித்து திட்டத்தின் பயன்கள் குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட மொத்தம் 4.200 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் சின்ன சேலம் ஒன்றியத்தில் 649 வீடுகளும், கள்ளக்குறிச்சி ஒன்றி யத்தில் 568 வீடுகளும்,கல்வராயன் மலை ஒன்றியத்தில் 101 வீடுகளும், திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 489 வீடுக ளும், ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் 674 வீடுகளும்,சங்கராபுரம் ஒன்றியத்தில் 342 வீடுகளும்,தியாகதுருகம் ஒன்றியத்தில் 611 வீடுகளும்,திருநாவலூர் ஒன்றியத்தில் 372 வீடுகளும், உளுந்தூர்பேட்டை ஒன்றி யத்தில் 394 வீடுகளும் கட்டப்பட உள்ளது.