சென்னை பெரம்பூர் ஜவகர்நகரில் மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில் ஆஃப் சோஷியல் சர்வீசஸ் நிறுவனத்தின் சார்பாக சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சாம்சன் (ஆயர் சிஎஸ்ஐ), வழக்கறிஞர் விஜயலட்சுமி, நிர்வாகிகள் அன்பு செங்கோ அரசி, சில்வியா, தரணி ஆகியோர் பங்கேற்று பேசினர். கல்லூரி மாணவிகள் ஜனனி, பிரியா, சாய், சபரி, கூட்டமைப்பு நிர்வாகிகள், சுய உதவிக்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.