districts

img

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கலை நிகழ்ச்சிகள்

மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில்  பொங்கலன்று ஆவாஜிப்பேட்டை, மாத்தூர், செய்யூர், பொன்னேரி டி.வி.புரம், காக்கவாக்கம், தண்டலம், தாராட்சி, திருவள்ளூரை அடுத்த பெரிய குப்பம் உள்ளிட்ட பல கிராமங்களில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மெய்யூர் கிராமத்தில் கிளை தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். பூண்டி ஒன்றிய செயலாளர் கே.விஜயகாந்த் விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். வாலிபர் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்டத் தலைவர் எஸ்.கலையரசன்,  செயலாளர் டி.மதன், மெய்யூர் ஊராட்சி மன்றத்தலைவர் லாவண்யா சரத்பாபு, ஒன்றியக்கவுன்சிலர் தேன்மோழி ஏழுமலை, கிளைச்செயலாளர் முத்துகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.