districts

img

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலைத் திருவிழா

வேலூர், நவ. 21 - வேலூர் ஓட்டேரி செவன்த் டே அட்வென்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடத்தப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்து கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் பாபு, துணை மேயர் சுனில் குமார், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில ஆலோசகர் சுந்தரராமன், வருவாய் கோட்டாட்சியர் கவிதா முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி உட்பட பலர் கலந்து கொண்டனர்.