கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய எம்ஆர்பி செவிலியர்களை கைது செய்த தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் விளக்கி பேசினார். நிர்வாகிகள் கோவிந்தராஜ்,திம்மராஜ், மஞ்சுளா, வசுந்தரா,வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.