ஆரூர் தனியார் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் காவல்துறையால் தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழ்நாடு அரசு உடன் தலையிட்டு பேசி தீர்க்க வலியுறுத்தியும் மதுராந்தகம் வட்டம், படாளம் கூட் ரோட்டில் விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எம். எஸ்.அர்ஜுன் குமார் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் அரிகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் வாசுதேவன், சிபிஎம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா ஆகியோர் உரையாற்றினர் .