சென்னை, ஏப். 24- வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. வடலூரில் வள்ளலார் கோயில் அமைந்துள்ள சத்தியஞான சபை முன்பு ரூ.99 கோடியே 6 லட்சம் செலவில் வள்ளலார் சர்வ தேச மையம் அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்தும், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க தடை கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள், தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்திய நாராயண பிரசாத் அமர்வில் புதனன்று (ஏப்.24) விசாரணைக்கு வந்தன. ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சர்வ தேச மையத்தில் ஏற்படுத்தப்பட உள்ள 16 வசதிகளை விளக்கி தமிழ்நாடு அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ள தாகவும், அதில் 17 - 18ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சுற்றுச்சுவரின் எச்சங்கள் மட்டும் கண்டறியப்பட்டதாகவும், அந்த பகுதியில் எந்த கட்டுமானமும் நடை பெறவில்லை என்றும் தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். பணியின் போது ஏதேனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அல்லது தொல்லியல் துறை முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள் கண்டறியப்பட்டால் அவை பாதுகாக்கப்படும் எனவும் உறுதி தெரிவித்தார். அப்போது தொல்லியல் துறை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தால்தான் முறை யாக இருக்கும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை வழக்கறிஞர், மூன்று பேர் கொண்ட தொல்லியல் நிபுணர் குழு அமைத்து, ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கப்படும் என தெரி வித்தார். இதை பதிவு செய்த நீதி பதிகள், தொல்லியல் நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தர விட்டனர். மேலும், இந்த வழக்கை கோயில்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வுக்கு மாற்றியும் தலைமை நீதிபதி அமர்வு உத்தர விட்டது.