districts

img

ஆரணி வேட்பாளர் தரணி வேந்தனுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை, ஏப். 2- ஆரணி மக்களவைத் தொகுதி திமுக  வேட்பாளர்  எம். எஸ். தரணிவேந்தனுக்கு  கிராம பொதுமக்கள் ஆரத்தி எடுத்து பூ மாலை அணிவித்து  உற்சாக வரவேற்பு அளித்தனர்.   திறந்தவெளி வாகனத்தில் ஏறி பிரசாரத்தை மேற்கொண்ட வேட்பாளர் தரணிவேந்தன் கிராம மக்களிடம் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் விலைவாசி மிக அதிகமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக கியாஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. எனவே இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் தமக்கு உதய வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முன்னதாக அவர் போளூர் பகுதியில் வாக்கு சேகரித்த போது, வடமாதிமங்கலம், மண்ட கொளத்தூர், களம்பூர், கஸ்தம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் சிவாஜி, வெங்கடேசன், பாலமுருகன், மாரிமுத்து, ரவி ஆகியோர் கலந்து கொண்டு வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.