கள்ளக்குறிச்சி, மார்ச். 3 - உளுந்தூர்பேட்டை அருகே உள்ள களமருதூர் பெரியஏரிக்கு நீர் வரத்துத் தடைபட்டுள்ளதால் 3000 ஏக்கர் விவசாயம் நிலம் தரிசாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையொட்டி உள்ள களமருதூர் கிராமத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. மழைக் காலங்களில் கிடைக்கும் தண்ணீர் அனைத்தும் ஆற்று வாய்க்கால் உள்ளிட்ட 4 நீர்வரத்து வாய்க்கால் வழியாக இந்தப் பெரிய ஏரிக்கு வந்தடையும் இதனால் பெரிய ஏரி முழுமையாக நிரம்புவ தோடு களமருதூர் களவனூர் டி ஒரத்தூர் கிளாப்பாளையம் ஆகிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. இந்த நிலையில் கடந்த 10ஆண்டு களாக ஏரி மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களை அதே பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ள தால் ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள் ளது. இதனால் 3000 ஏக்கர் பரப்பள வில் விவசாயம் செய்யப்பட்ட நிலம் தற்போது 200 ஏக்கராக சுருங்கி யுள்ளது. கடந்த காலங்களில் இந்த ஏரியை நம்பி மூப்போகம் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் தற்பொழுது ஒரு போகம் மட்டுமே பயிர் செய்து வருகின்றனர். விவ சாயிகள் சாகுபடி செய்த நெல் பயிருக்கு ஏரியில் இருக்கின்ற தண்ணீரை மோட்டார் வைத்து பாய்ச்சி வரும் அவர்கள் அடுத்த பாய்ச்ச லுக்கு தண்ணீர் கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இச்சூழல் நீடித்தால் இந்த ஏரி தண்ணீரை நம்பி விவசாயம் செய்யப் பட்ட 3000 ஏக்கரும் விவசாய நிலங்கள் தரிசு நிலமாக மாறும் நிலை ஏற்பட்டு விடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி பெரிய ஏரி மற்றும் நீர் வரத்து வாய்க்கால்களில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி, தூர்வாரி மழை நீர் ஏரிக்கு வந்தடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள னர். இந்த ஏரியில் மிகவும் பழமையான நான்கு மதகுகளையும் பொதுப்பணி துறையினர் இடித்து தள்ளிய பிறகும் புதிதாக எதுவும் இதுவரை கட்டித் தரவில்லை. மழைக்காலங்களில் சேமிக்கப்படும் நீரானது வீணாகும் நிலைமை ஏற்படுகிறது. ஆகவே பொதுப்பணித்துறை சார்பில் உட னடியாக மதகுகளை கட்டித் தர வேண்டும் என்பது இந்த ஏரியை நம்பி வாழும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். - ஜெ. சசிகுமார்