புதுச்சேரி,ஜன.23- சென்னை மியூசிக் அகாடமியின் 2023 ஆண்டுக் கான இசை அறிஞர் விருதைப் பெற்றுள்ள முனைவர் அரிமளம் சு.பத்ம நாபனுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெற்றது. முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற விழாவில், புதுவை தமிழ்ச் சங்க தலைவர் வி. முத்து தலைமை தாங்கினார். புதுச்சேரி கலை பண்பாட்டுத்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் பங்கேற்று வாழ்த்திப் பேசி னார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலை வர் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பாவலர் சு.சண்முகசுந்தரம், சங்கீதபூஷணம் வெ. ஜெகதீசன், கலை ஆய்வாளர் b ஜ. கோபால் மற்றும் கலைமாமணி முனைவர் கா.ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக, விழா நாயகர் விருதாளர் அரிமளம் சு.பத்ம நாபன் தனது இசைத் தமிழால் ஏற்புரை யாற்றினார். இந்த விழாவில் தமுஎகசாவின் முன்னாள் பொருளாளர் சு.ராமச்சந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் விநாயகம்,புதுச்சேரி தலைவர் உமா,செயலாளர் மணி.கலிய மூர்த்தி, நிர்வாகிகள் லெனின் பாரதி,கு.பச்சையம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.