districts

img

வீடு இல்லாதவர்களுக்கு அடுக்குமாடி வீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சிதம்பரம்,டிச.28- சிதம்பரத்தில் முதல்வரின் சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி வரவேற்றார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கடலூர் மாவட்ட ஆட்சி யரிடம் அதை உடனடியாக நடவடிக்கை எடுக்க ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பேசுகையில்,“ தமிழக முதல்வர் மீது நம்பிக்கை வைத்து பொதுமக்கள் பல ஆயிரக்கணக்கான மனுக்களை அளித்து வருகிறார்கள். அவர் எதிர்க்கட்சித் தலை வராக இருந்தபோது சிதம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 19,116 மனுக்களை பெற்றார்.  அதில் முதல மைச்சராக பதவியேற்ற  ஒரு மாதத்தில் 8, 953 மனுக்களுக்கு ரூ 41 கோடியில்  திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்” என்றார். கடலூர், சிதம்பரம் முக்கிய நகரமாகும். இதனால் கடலூர் மாநகராட்சியாகவும், சிதம்பரத்தை பெரு நகராட்சியாகவும் அரசு அறிவித்துள்ளது. கூடுதல்  நிதியை பெற்று மேம்படுத்துவதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்றும் சிதம்பரம் நகரத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்பில் இருந்தவர்களை கடந்த ஆட்சி காலத்தில் மாற்று இடம் கொடுக்காமல் அகற்றி விட்டனர்.  எனவே வீடுகள் இல்லாதவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி வீடுகள் கண்டிப்பாக கட்டித் தருவோம். தற்போது இடம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.